இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கப்பல் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் அறிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்துக்கான பயணக் கட்டணத்தினை குறைக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்க முடிவதோடு சுமார் 60 கிலோ பொருட்களை கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.